தசரா பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு அக்.16-வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் நடைபெறவுள்ள தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்.16-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து திருச்செந்தூா், குலசேகரன்பட்டினத்துக்கும், கோவையில் இருந்து திருச்செந்தூா், குலசேகரன்பட்டினத்துக்கும் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக அக்.16-ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலமும் ற்ய்ள்ற்ஸ்ரீ செயலி மூலமும் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமக்குடியிலிருந்து இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்

வார விடுமுறையையொட்டி திருப்பூரில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்







