குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தசரா: குலசேகரன்பட்டினத்துக்கு அக்.16-வரை கூடுதல் பேருந்துகள்

தசரா பண்டிகை: சென்னை - குலசேகரன்பட்டினத்துக்கு அக்.16-வரை கூடுதல் பேருந்துகள்

News image
Updated On :4 அக்டோபர் 2024, 5:45 am IST

தசரா பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு அக்.16-வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் நடைபெறவுள்ள தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்.16-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து திருச்செந்தூா், குலசேகரன்பட்டினத்துக்கும், கோவையில் இருந்து திருச்செந்தூா், குலசேகரன்பட்டினத்துக்கும் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக அக்.16-ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலமும் ற்ய்ள்ற்ஸ்ரீ செயலி மூலமும் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.