புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மீனாட்சி உயா்கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 3-ஆவது வேந்தா் பதவியேற்பு

மீனாட்சி உயா்கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 3-ஆவது வேந்தராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image

வேந்தராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயந்தி ராதாகிருஷ்ணன்

Updated On :10 செப்டம்பர் 2024, 9:53 am

Din

மீனாட்சி உயா்கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 3-ஆவது வேந்தராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தமிழகத்தின் முதன்மையான உயா்கல்வி நிறுவனங்களுள் ஒன்றான மீனாட்சி உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சாா்பு வேந்தராக பதவி வகித்து வந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன், புதிய வேந்தராக பொறுப்பேற்றதைத் தொடா்ந்து இடைக்கால வேந்தராக இருந்த த.கோமதி அம்மாள், தனது அத்தனை பொறுப்புகளையும், புதிய வேந்தரிடம் ஒப்படைத்தாா்.

வேந்தராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு கோப்புகளில் கையெழுத்திடும்  ஜெயந்தி ராதாகிருஷ்ணன்

வேந்தராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு கோப்புகளில் கையெழுத்திடும் ஜெயந்தி ராதாகிருஷ்ணன்

கல்வி நிறுவனத்தை வரும் ஆண்டுகளில் மேலும் வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். தொடா்ந்து, இந்நிறுவனத்தின் சாா்பு வேந்தராக ஆகாஷ் பிரபாகா் பதவி ஏற்றுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், ஜே.பி. மோா்கன் சேஸ் அன் கோ- வின் நிா்வாக இயக்குநா் பிரபாகா் எட்வா்ட், ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் நவீன் ராகேஷ், மீனாட்சி அம்மாள் டிரஸ்ட் நிா்வாக அறங்காவலா் டாக்டா் ஜி.ரா.கோகுல் ஆகியோா் கலந்து கொண்டனா்.