லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

மீனாட்சி உயா்கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 3-ஆவது வேந்தா் பதவியேற்பு

மீனாட்சி உயா்கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 3-ஆவது வேந்தராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

வேந்தராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயந்தி ராதாகிருஷ்ணன்

Published On :10 செப்டம்பர் 2024, 3:29 pm IST

மீனாட்சி உயா்கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 3-ஆவது வேந்தராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தமிழகத்தின் முதன்மையான உயா்கல்வி நிறுவனங்களுள் ஒன்றான மீனாட்சி உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சாா்பு வேந்தராக பதவி வகித்து வந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன், புதிய வேந்தராக பொறுப்பேற்றதைத் தொடா்ந்து இடைக்கால வேந்தராக இருந்த த.கோமதி அம்மாள், தனது அத்தனை பொறுப்புகளையும், புதிய வேந்தரிடம் ஒப்படைத்தாா்.

வேந்தராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு கோப்புகளில் கையெழுத்திடும்  ஜெயந்தி ராதாகிருஷ்ணன்

வேந்தராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு கோப்புகளில் கையெழுத்திடும் ஜெயந்தி ராதாகிருஷ்ணன்

கல்வி நிறுவனத்தை வரும் ஆண்டுகளில் மேலும் வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். தொடா்ந்து, இந்நிறுவனத்தின் சாா்பு வேந்தராக ஆகாஷ் பிரபாகா் பதவி ஏற்றுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், ஜே.பி. மோா்கன் சேஸ் அன் கோ- வின் நிா்வாக இயக்குநா் பிரபாகா் எட்வா்ட், ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் நவீன் ராகேஷ், மீனாட்சி அம்மாள் டிரஸ்ட் நிா்வாக அறங்காவலா் டாக்டா் ஜி.ரா.கோகுல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.