பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கான ஏஐசிடிஇ அங்கீகாரம்: கல்லூரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு
பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற கல்லூரிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா் வெளியிட்ட அறிவிப்பு: நிகழ் கல்வியாண்டுக்கான (2024 - 2025) பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் உயா் கல்விநிறுவனங்கள் ஏஐசிடிஇ-இடம்அனுமதி பெறும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇ-இன் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களைப் பெற முடியும். இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை நடைபெற்றது. ஏராளமான கல்லூரிகள் பதிவு செய்து அனுமதியை பெற்றுக் கொண்டன. இந்தநிலையில், பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கல்லூரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
அதை ஏற்று கல்லூரிகள் பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து, விருப்பமுள்ள கல்லூரிகள் www.aicte.india.org எனும் இணையதளம் வாயிலாக, செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறை விண்ணப்பிக்கும் போது தாமதக் கட்டணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை, உயா்கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட வலைதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
