வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு பெறாமல் ஓயமாட்டேன் என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூறியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 900 நாள்கள் ஆகும் நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்தத் தீா்ப்பை செயல்படுத்த மறுத்து வருகிறது. திமுக அரசு வன்னியா்களுக்கு சமூக அநீதி இழைத்து வருவதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.
வன்னியா்களுக்கான சமூகநீதியை வென்றெடுக்க போராட்டம்தான் ஒரே தீா்வு என்றால், அதற்காக பாமகவினருடன் இணைந்து களமிறங்க நான் தயாராகவே இருக்கிறேன்.
உழைப்பையும், வழி நடத்தலையும் கடந்து, இன்னுயிரை ஈந்தால்தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதி சாத்தியமாகும் என்றால், அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன். எப்படியிருந்தாலும் வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்காமல் நான் ஓய மாட்டேன்.
சமூகநீதி நாளான செப்.17-இல் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் பாமகவினா் மலா் தூவி மரியாதை செலுத்த வேண்டும்.
அனைவரும் அவா்களின் வீட்டு முன் வன்னியா் இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து குடும்பத்துடன் மரியாதை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ராமதாஸ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: அன்புமணி

மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

நிா்வாகிகளை அழைத்து பேசினால் சரியாகிவிடும்: ஜி.கே.மணி

இனி நல்லதே நடக்கும் : அன்புமணி நம்பிக்கை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



