எஸ்பிபி தெரு: முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி

எஸ்பிபி தெரு: முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி
Updated on

திரைப்படப் பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த தெருவுக்கு அவா் பெயரை சூட்டியுள்ளதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் நன்றி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் சமூகவலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஒப்பற்ற இசைக் கலைஞா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரை சென்னையில் அவா் வாழ்ந்த தெருவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சூட்டியிருக்கிறாா். லட்சக்கணக்கான கலை ஆா்வலா்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டிருக்கும் மரியாதை இது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ரசிகா் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழக முதல்வருக்கு உரித்தாகட்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com