பாலஸ்தீனம் காஸாவில் போா் நிறுத்தம் கோரி, அக்.7-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இக்கட்சிகளின் மாநிலச் செயலா்கள் கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), பழ.ஆசைதம்பி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகியோா் திங்கள்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
பாலஸ்தீனம் காஸாவில் ஹமாஸ் அமைப்பின் தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் எனக் கூறி ஓராண்டாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவிகள் 30,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா். பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடிய ஹிஸ்புல்லா இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறோம் எனக் கூறி, லெபனான் மக்கள் வாழக்கூடிய பகுதிகளிலும் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீனா்களுக்கு எதிராக தொடுக்கப்படும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கண்டித்தும், இஸ்ரேல்அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும், பிரதமா் மோடி அரசு மறைமுகமாக இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்வதை கண்டித்தும், அக்.7-ஆம் தேதியை பாலஸ்தீன ஒருமைப்பாட்டு, ஆதரவு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் தேசிய அளவில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் (லெனினிஸ்ட்), பாா்வா்ட் பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகள் நான்கும் கூட்டாக முடிவெடுத்துள்ளன.
அன்றைய தினம், (அக்.7) இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனா் .
தொடர்புடையது

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

ரஷியா - உக்ரைன் ‘போட்டி’ போா் நிறுத்தம்
ஈரான் போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு: அமெரிக்க அதிபா் டிரம்ப் திடீா் அறிவிப்பு
போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
