நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இன்று ஏசி மின்சார ரயில் மாலை நேர சேவை ரத்து

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை.

Updated On :25 ஏப்ரல் 2025, 8:08 pm

Din

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சனிக்கிழமை (ஏப்.26) மாலை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.45-க்கும், மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45-க்கும் இயக்கப்படும் ரயில் சேவை சனிக்கிழமை ரத்து செய்யப்படும். மற்ற நேரங்களில் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.