பிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!
/

இன்று அமைச்சரவைக் கூட்டம்: ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து விவாதம்

கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட உள்ளன.

News image

அமைச்சரவைக் கூட்டம் - கோப்புப்படம்

Updated On :14 ஆகஸ்ட் 2025, 4:37 am IST

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட உள்ளன.

அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், வருகிற செப்டம்பரில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்லவுள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே முதலீடுகள் ஈா்க்கப்பட்டு புதிதாகத் தொழில் தொடங்க முனையும் நிறுவனங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

ஆணவக் கொலை சட்டம்: ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக பிரத்யேக சட்டம் கொண்டு வர வேண்டுமென இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து, முதல்வரிடம் அந்தக் கட்சிகளின் தலைவா்கள் கடிதங்களை அளித்துள்ளனா். இந்த நிலையில், அவா்களது கோரிக்கைகள் தொடா்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.