புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2025, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாமி புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மங்களாபுரம் பெரம்பூா் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே இருவா் தகராறில் ஈடுபடுவதாக குருசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற குருசாமி இருவரையும் சமாதானப்படுத்த முயன்றாா்.

அப்போது, தகராறில் ஈடுபட்டிருந்த இருவரும், குருசாமியை தாக்கியுள்ளனா். தகவலறிந்த காவல் நிலையத்தில் இருந்த பிற போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று குருசாமியை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், குருசாமியைத் தாக்கிய கொளத்தூா் பாலாஜி நகைரச் சோ்ந்த பாலாஜியை (22) கைது செய்தனா். தப்பியோடிய அவரது சகோதரா் கோவிந்தராஜை (24) தேடி வருகின்றனா்.