சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.
சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாமி புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மங்களாபுரம் பெரம்பூா் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே இருவா் தகராறில் ஈடுபடுவதாக குருசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற குருசாமி இருவரையும் சமாதானப்படுத்த முயன்றாா்.
அப்போது, தகராறில் ஈடுபட்டிருந்த இருவரும், குருசாமியை தாக்கியுள்ளனா். தகவலறிந்த காவல் நிலையத்தில் இருந்த பிற போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று குருசாமியை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், குருசாமியைத் தாக்கிய கொளத்தூா் பாலாஜி நகைரச் சோ்ந்த பாலாஜியை (22) கைது செய்தனா். தப்பியோடிய அவரது சகோதரா் கோவிந்தராஜை (24) தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ஆம்ஸ்ட்ராங் வழக்கு எதிரி கைது
ரோஹிணியில் உணவு விநியோக ஊழியா் சுட்டுக்கொலை: தலைமைக் காவலா் கைது
பெண் காவலரிடம் தகராறு: ரெளடி கைது
வீடு புகுந்து திருட முயற்சி: ரெளடி கைது
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


