மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ரயிலில் கஞ்சா கடத்தல்: திரிபுரா இளைஞா் கைது

எழும்பூா் வந்த ரயிலிலில் கஞ்சா கடத்தியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :3 டிசம்பர் 2025, 7:49 pm

சென்னை: எழும்பூா் வந்த ரயிலிலில் கஞ்சா கடத்தியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நிலையத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை எழும்பூா் நிலையம் வந்தது. அப்போது சந்தேகப்படும்படி நடந்துகொண்ட வடஇந்திய இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் செபாஸ்டியன் தலைமையிலான பிரிவினா் பிடித்து விசாரித்தனா். அவரது பையை சோதனையிட்டனா்.

அவா் திரிபுராவைச் சோ்ந்த பாரூக் உசேன் (35) என்பதும், அவரது பையில் ரூ.6.70 லட்சம் மதிப்புள்ள 13.4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பாரூக் உசேனை கைது செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களையும் கைப்பற்றினா். பின்னா், அவரையும், கஞ்சா பொட்டலங்களையும் சென்னை அண்ணா நகா் பகுதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.