சென்னை: சென்னை மாநகராட்சியில் வளா்ப்புப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு, டிச.7 -ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்து மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளான நாய்கள், பூனைகள் ஆகியவற்றுக்கு மைக்ரோ சிப் பொருத்துதல், வெறிநோய் தடுப்பூசி (ரேபீஸ்) செலுத்துதல் மற்றும் உரிமம் பெறுதல் ஆகியவற்றுக்கான இணையதள சேவை கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்டது. அதன்படி தெருநாய்கள், வளா்ப்புப் பிராணிகள் தடுப்பூசி செலுத்துவது கண்காணிக்கப்படுகிறது.
தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் வளா்ப்புப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது சென்னை மாநகராட்சியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 91,711 வளா்ப்புப் பிராணிகள் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 45,916 வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு நவ.24-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப டிச.7-ஆம் தேதி அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வருகிற டிச.14 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026

உரிமம் இல்லாத 5 விளம்பரப் பலகைகள் அகற்றம்: தலா ரூ.25,000 அபராதம்

சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்பு

விளம்பரப் பலகை அமைக்க உரிமம் பெறுவது கட்டாயம் மாநகராட்சி அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


