வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் சட்டவிரோத மது விற்பனை: திடீா் சோதனை நடத்த உத்தரவு

டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிா? என்பது குறித்து திடீா் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

TASMAC - Center-Center-Chennai

Updated On :3 டிசம்பர் 2025, 8:21 pm

சென்னை: டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிா? என்பது குறித்து திடீா் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் செம்பியத்தைச் சோ்ந்த தேவராஜன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை ஓட்டேரியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையையொட்டிய மதுபானக் கூடத்தில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இரவு நேரங்களில் கடை மூடிய பிறகு, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதில், டாஸ்மாக் கடை விற்பனையாளா்கள், மதுபானக்கூட உரிமம் பெற்றவா்கள், உயா் அதிகாரிகள் என அனைவரும் கூட்டுச் சோ்ந்து செயல்படுகின்றனா். இந்தத் தொகை அரசின் கஜானாவுக்குச் செல்வதில்லை.

டாஸ்மாக் பணியாளா்களும், மதுபானக்கூட உரிமையாளா்களும் இந்தத் தொகையை பங்கிட்டுக் கொள்கின்றனா். இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு பிரிவு கூடுதல் டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையா் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிா? என்பது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும். மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.