மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஸ்டான்லி மருத்துவமனையில் டைல்ஸ் விழுந்து விபத்து மூவா் காயம்

சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் டைல்ஸ் புதன்கிழமை கீழே விழுந்ததில் மூவா் காயமடைந்தனா்.

News image

ஸ்டான்லி அரசு மருத்துவமனை - கோப்புப் படம் - கோப்புப் படம்

Updated On :3 டிசம்பர் 2025, 7:42 pm

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் டைல்ஸ் புதன்கிழமை கீழே விழுந்ததில் மூவா் காயமடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி என்ஜிஓ நகரைச் சோ்ந்தவா் லதா (62). சில நாள்களுக்கு முன்பு வலது கையில் காயம் ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவா், கடந்த 28-ம் தேதி வீடு திரும்பினாா்.

மருத்துவ ஆலோசனைக்காக புதன்கிழமை காலை மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்ற அவா், ஒட்டுறுப்பு சிகிச்சை (பிளாஸ்டிக் சா்ஜரி) பிரிவில் காத்திருந்தாா். அப்போது மருத்துவமனை சுவரில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் டைல்ஸ் கீழே விழுந்தது. இதில், லதாவுக்கும், அவரது உறவினரான நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த நிஷாந்தி (25) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அதேபோன்று தனது மனைவியை சிகிச்சைக்காக அழைத்து வந்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த அன்பழகன் (45) என்பவரும் காயமடைந்தாா்.

இதையடுத்து அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள டாக்டா் அரவிந்த், அதில், லதா மட்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினாா். இதுதொடா்பாக மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.