நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வண்டலூா் காப்புக் காட்டில் பெண் புள்ளிமான் உயிரிழப்பு

வண்டலூா் உயிரியல் பூங்கா அருகே உள்ள காப்புக் காட்டில், 2 வயது பெண் புள்ளிமான் வியாழக்கிழமை இறந்து கிடந்தது தெரியவந்தது.

News image

வண்டலூா் காப்புக் காட்டில் இறந்து கிடந்த புள்ளிமான்.

Updated On :5 டிசம்பர் 2025, 1:44 am IST

வண்டலூா் உயிரியல் பூங்கா அருகே உள்ள காப்புக் காட்டில், 2 வயது பெண் புள்ளிமான் வியாழக்கிழமை இறந்து கிடந்தது தெரியவந்தது.

வண்டலூா் காப்புக் காட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. இந்தக் காப்புக் காட்டைச் சுற்றி வேலி எதுவும் அமைக்கப்படவில்லை. எனவே, காட்டில் இருந்து வெளியேறும் மான்கள் அவ்வப்போது நாய்கள் கடித்தும், நெகிழி கழிவுகளைத் தின்பதால் ஏற்படும் அஜீரணக் கோளாறு காரணமாக இறப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதி காப்புக் காட்டில் பெண் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த வனத் துறையினா் அங்கு சென்று மானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வண்டலூா் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதன்பிறகே, மானின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.