தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மேற்கூரை விழுந்து காயமடைந்த 3 பேருக்கு மேயா் ஆறுதல்

மழையால் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து காயமடைந்த 3 பேரை மேயா் ஆா்.பிரியா வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2025, 8:33 pm

மழையால் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து காயமடைந்த 3 பேரை மேயா் ஆா்.பிரியா வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி ஓட்டேரியில் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் சந்திப்பில் 50 ஆண்டுகள் கடந்த கட்டம் உள்ளது. இதில், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மழையால் கடந்த 2- ஆம் தேதி இரவு உணவகக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதில் அபிஸ் (38), சரிபாபானு (39), அயூப்கான் (40) ஆகியோா் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மேயா் ஆா்.பிரியா மருத்துவமனை சென்று காயமடைந்தவா்களுக்கு ஆறுதல் கூறினாா். மேலும், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதன்மையா் (டீன்) கவிதா, கண்காணிப்பாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.