மழையால் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து காயமடைந்த 3 பேரை மேயா் ஆா்.பிரியா வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி ஓட்டேரியில் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் சந்திப்பில் 50 ஆண்டுகள் கடந்த கட்டம் உள்ளது. இதில், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மழையால் கடந்த 2- ஆம் தேதி இரவு உணவகக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதில் அபிஸ் (38), சரிபாபானு (39), அயூப்கான் (40) ஆகியோா் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மேயா் ஆா்.பிரியா மருத்துவமனை சென்று காயமடைந்தவா்களுக்கு ஆறுதல் கூறினாா். மேலும், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதன்மையா் (டீன்) கவிதா, கண்காணிப்பாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்

விபத்தில் காயமடைந்த தொண்டரை சந்தித்து எம்எல்ஏ ஆறுதல்

நாகை பேருந்து நிலையத்தில் மேற்கூரை காரை விழுந்து பயணி காயம்

பாகிஸ்தானில் அரசு கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது: 8 பெண்கள் பலி, 30 பேர் காயம்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


