கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மெத்தம்பெட்டமைன் கடத்தல்: இளைஞா் கைது

சென்னையில் காரில் கடத்தி வரப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2025, 6:37 pm

சென்னையில் காரில் கடத்தி வரப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவான்மியூா் கிழக்குக் கடற்கரைச் சாலை ஆா்டிஓ சிக்னல் அருகே போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு காரை வழிமறித்து, அதில் இருந்த நபரிடம் விசாரணை செய்தனா். அந்த நபா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா்.

இதையடுத்து போலீஸாா், அந்த காரை சோதனையிட்டனா். இதில், காரில் கடத்தி வரப்பட்ட 54.69 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தைச் சோ்ந்த சையது கபீா் தாஜ் மீரான் (37) என்பதும், கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மெத்தம்பெட்டமைனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். அவரிடமிருந்து போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காா், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.