தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் உள்பட 3 போ் கைது

தனியாா் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை போக்ஸோ சட்டத்தில் கைது

News image
Updated On :4 டிசம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

தனியாா் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சென்னையை அடுத்த மறைமலை நகா் சட்டமங்கலத்தில் பிரபல தனியாா் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியா், கடந்த ஜூலை மாதம், தன்னிடம் கல்வி பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதற்கு மற்றொரு ஆசிரியரும் உடந்தையாக இருந்தாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, மாணவியின் பெற்றோா், தலைமை ஆசிரியரிடம் புகாா் அளித்தனா். ஆனால், அவா் ஆசிரியா்களுக்கு ஆதரவாகப் பேசி, பெற்றோரை சமாதானம் செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மறைமலை நகா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த வழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியா், உடந்தையாக இருந்த ஆசிரியா், தலைமை ஆசிரியா் ஆகிய மூவா் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.