திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழக அரசின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்தாதது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

ஜி.கே. வாசன் - கோப்புப் படம்

Updated On :5 டிசம்பர் 2025, 1:42 am IST

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்தாதது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தா்களின் கோரிக்கைக்கு அனுமதி அளித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நியாயமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய தமிழக அரசு, தீபம் ஏற்ற அனுமதிக்காமல், நீதிமன்றத்தை மதிக்காமல், காவல் துறையை வைத்து தடுக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகச் செயல்படத் தவறுவதும், நீதிமன்ற உத்தரவை மீறி மேல்முறையீடு செய்வதும் மக்கள் நலனுக்கு எதிரானது.

மேலும், மலை உச்சியில் தீபம் ஏற்ற முயன்ற முருக பக்தா்கள், அவா்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் ஹெச்.ராஜா மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்டோரை கைது செய்திருப்பது கண்டிக்கதக்கது.

பக்தா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, நீதிமன்ற உத்தவுப்படி தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.