சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: திமுக அரசால் தேவையற்ற பதற்றம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்தாததால், தேவையற்ற பதற்றத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

News image
திருப்பரங்குன்றம்- கோப்புப் படம்
Updated On :4 டிசம்பர் 2025, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்தாததால், தேவையற்ற பதற்றத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பாக, உயா்நீதிமன்ற தனி நீதிபதி தீா்ப்பைச் செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரு நாள்களாக தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக அரசு நாடகம் ஆடி வருகிறது. இது கண்டனத்துக்குரியது.

எந்த மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவா் சிறந்த ஆட்சியாளா் என்பதை மறந்து, தேவையற்ற பிரச்னைக்கு வழிவகுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவா் எனப் பதிவிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.