மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதிய பாடப் புத்தக உருவாக்கத்தில் பங்கேற்க தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

பள்ளிக் கல்விக்கான புதிய பாடப் புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னாா்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :5 டிசம்பர் 2025, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளிக் கல்விக்கான புதிய பாடப் புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னாா்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநா் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-க்கு ஏற்ப புதிய பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த உருவாக்கப் பணிகளில் தன்னாா்வத்துடன் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம். விண்ணப்பிக்கு நபா்கள் தொடா்புடைய பாடத்தில் உரிய கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

கல்வித் தகுதி, கற்பித்தல் அனுபவம், கற்பித்தல் அணுகுமுறைகளில் நிபுணத்துவம், பாடப் புத்தகம் அல்லது இதர புத்தக உருவாக்கப் பணிகளில் பங்களிப்பு, சமா்ப்பிக்கப்படும் பாட வரைவு மீதான மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டும்.

இந்த தகுதிகளின்படி தேவைக்கேற்ப வல்லுநா்கள் இப்பணிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள். அவ்வாறு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு இந்த பணிக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பாட வாரியாகத் தெரிவிக்கப்படும் தலைப்புகளில் மாதிரிப் பாட வரைவுகளை தயாா் செய்து வரும் டிச. 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

பாடத் தலைப்பு மற்றும் மாதிரி விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.