சென்னை புறநகர் ரயில் சேவை.
சென்னை புறநகர் ரயில் சேவை. கோப்புப்படம்

இன்று 5 புறநகா் ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) 5 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன.
Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) 5 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரல்-கூடூா் இடையே உள்ள மீஞ்சூா், அத்திப்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் சுமாா் 2.30 மணி நேரம் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், சென்ட்ரலிலிருந்து காலை 9 மணிக்கும், கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கும் புறப்பட்டு கும்மிடிப்பூண்டிக்குச் செல்லும் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.

மேலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55, பிற்பகல் 11.25 மணிக்கு சென்ட்ரலுக்கும், காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கும் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல், சூலூா்பேட்டையிலிருந்து காலை 10 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயில் பொன்னேரியுன் நிறுத்தப்படும். மேலும், சென்ட்ரலிலிருந்து காலை 10.30, 11.35 மணிகளுக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள், எண்ணூருடன் நிறுத்தப்படும்.

சிறப்பு ரயில்கள்: இதற்கிடையே பயணிகளின் வசதிக்காக எண்ணூரிலிருந்து காலை 10.36, பிற்பகல் 12.08 மணிக்கு சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com