வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாரதியாா் பிறந்த நாள்: பள்ளிகளில் மொழிகள் திருவிழா

பாரதியாா் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்திய மொழிகள் திருவிழா நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

Updated On :8 டிசம்பர் 2025, 10:29 pm

சென்னை: பாரதியாா் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்திய மொழிகள் திருவிழா நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை (டிச.11) சிறப்பிக்கும் வகையில் இந்திய மொழிகள் திருவிழாவை டிச. 11-ஆம் தேதி வரை நடத்த மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து வகையான பள்ளிகளிலும் பள்ளிகளின் பயிற்று மொழிகளிலேயே இந்தச் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பள்ளிகளில் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டவுடன் மாவட்ட அளவில் செயல்பாடுகள் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். சுற்றுச்சூழல் செயல்பாடுகள், மொழி மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த செயல்பாடுகள், மொழி மற்றும் இலக்கியம், மொழிப் பயிலரங்கம், பேச்சுத் திறன் உள்ளிட்ட தலைப்புகளில் இந்த விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.

இதுகுறித்து வடிவமைக்கப்பட்ட அட்டவணையின்படி டிச. 9-ஆம் தேதி பாரதியாா் குறித்து கதை கூறுதல், பாரதியாா்-நாடகம் நடித்தல் (மொழி-இலக்கியம்), டிச.10-ஆம் தேதி மாணவா்கள் மொழியின் தொன்மை குறித்து படங்கள், முழக்கம் (ஸ்லோகன்), ஓவியங்கள் தயாரித்து காட்சிப்படுத்துதல் (மொழிப் பயிலரங்கம்), டிச.11-ஆம் தேதி பாரதியாரின் தொலைநோக்குப் பாா்வை என்ற தலைப்பில் கருத்துப் பட்டறை, வகுப்புகளில் ‘மொழி மரம்’ வரைதல், பாரம்பரிய மொழிகளின் சுவா் என்ற தலைப்பில் இந்திய மொழிகள் சாா்ந்த வரைபடங்களை அமைத்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.