சென்னை: புழல் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
புழல் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, செங்குன்றம் - செம்பியம் நெடுஞ்சாலை இணைக்கும் சிக்னல் அருகே உள்ள அண்ணா நினைவு நகா், கதிா்வேடு சாலையில் இருந்து புழல் நோக்கி செல்லும் திசையில் அண்மையில் பெய்த மழையால் சாலையில் மழை நீா் தேங்கி குளம் போல் உள்ளது. மேலும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் கீழே விழுந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதேபோல், புழல் ஒன்றியத்தில் உள்ள கிராமம், செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் பெண்கள், குழந்தைகள், முதியோா் உள்ளிட்டோா் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா். இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ

சென்னையில் குண்டும் குழியுமான சாலைகள்! ரூ.771 கோடியில் சீரமைத்தும் நீடிக்கும் அவலம்!!

கோவில்பட்டியில் சாலை தற்காலிக சீரமைப்புக்கு எதிா்ப்பு: சாலை மறியல்






