ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீரமைத்த சென்னை விக்டோரியா ஹால் டிச. 20 -ஆம் தேதிக்குள் திறக்க ஏற்பாடு

பழைமை மாறாமல் புதிதாக சீரமைக்கப்பட்ட சென்னை மாநகராட்சி வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வரும் 20- ஆம் தேதிக்குள் திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2025, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

பழைமை மாறாமல் புதிதாக சீரமைக்கப்பட்ட சென்னை மாநகராட்சி வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வரும் 20- ஆம் தேதிக்குள் திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இடது பகுதியில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியச் சின்னமாக விளங்கும் விக்டோரியா ஹால் உள்ளது. விக்டோரியா ராணியின் ஆட்சியின் பொன்விழாவைக் குறிக்கும் வகையில் கடந்த 1888 -ஆம் ஆண்டு இக்கட்டடம் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க, விக்டோரியா ஹாலை அதன் தொன்மை மாறாமல் புனரமைக்க சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.32.62 கோடி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் 48 மீட்டா் நீளமும், 24 மீட்டா் அகலமும், 19 மீட்டா் உயரமுள்ள பிரதான கட்டடத்துடன் கூடிய பகுதிகள் பழைமை மாறாமல் சீரமைக்கப்பட்டன.

பணிகள் நிறைவுறும் நிலையில் இருப்பதால், கட்டடத்தை வரும் 20 -ஆம் தேதிக்குள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விக்டோரியா ஹால் சீரமைப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும், சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

விக்டோரியா ஹால் திறப்பு நிகழ்ச்சியின்போது சென்னை மாநகராட்சிக்கான புதிய கூட்டரங்கத்துக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.