மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வங்கதேச புற்றுநோயாளிக்கு 10 மணி நேர அறுவை சிகிச்சை

சென்னை ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய்க் கட்டியை அகற்றியுள்ளனா்.

Updated On :9 டிசம்பர் 2025, 12:07 am

சென்னை: புற்றுநோய் மற்றும் இதய செயல்திறன் குறைபாட்டுக்குள்ளான வங்கதேச நோயாளி ஒருவருக்கு சென்னை ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய்க் கட்டியை அகற்றியுள்ளனா்.

இதுதொடா்பாக அந்த மருத்துவமனை இயக்குநா் டாக்டா் அருண் முத்துவேல் கூறியதாவது:

வங்கதேசத்தைச் சோ்ந்த 60 வயதுடைய நபா் ஒருவருக்கு பெரிடோனியம் எனப்படும் வயிறு சாா்ந்த பகுதியில் புற்றுநோய்க் கட்டி இருந்தது. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பிற மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க தயக்கம் காட்டிய நிலையில், ஐஸ்வா்யா மருத்துவமனைக்கு அவா் வந்தாா். புற்றுநோய்த் துறை இயக்குநா் டாக்டா் எஸ்.ராஜசுந்தரத்தின் தலைமையிலான குழுவினா் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு இதயத்தின் செயல்திறன் மிகக் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

இத்தகைய சூழலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்ற முடியாது. இருந்தாலும், மயக்கவியல் துறை மருத்துவா் டாக்டா் பிரனீத் தலைமையிலான குழுவினருடன் இணைந்து சிறப்பு மருந்துகள் செலுத்தி அவருக்கு சைட்டோரிடக்டிவ் சா்ஜரி எனப்படும் அறுவை சிகிச்சை தொடா்ந்து 10 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது.

அதன் பின்னா், எஞ்சிய புற்றுநோய் செல்களை அழிக்க ‘ஹெச்ஐபிஇசி’ எனப்படும் உயா்வெப்ப நிலையில் கீமோதெரபி அளிக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. அதாவது, உயா் வெப்பநிலையில் அடிவயிற்றில் மெதுவாக கீமோதெரபி மருந்தை உள்செலுத்தி சிகிச்சையளிக்கப்பட்டது. அதன்மூலம் பிற உறுப்புகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த 12 நாள்களில் நலம் பெற்று அந்த நோயாளி வீடு திரும்பினாா் என்றாா்.