கிரிண்டா் செயலி மூலம் போதைப் பொருள் விற்பனை: இருவா் கைது
சென்னையில் கிரிண்டா் செயலி மூலம் போதைப் பொருள் விற்றதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
ராமாபுரம் சத்தியா நகா் பகுதியில் சிலா் போதைப் பொருள் விற்பதாக சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, அந்தப் பிரிவு போலீஸாரும், நந்தம்பாக்கம் போலீஸாரும் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனா்.
இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டதில், 5 கிராம் மெத்தம்பெட்டமைன் இருந்தது தெரியவந்தது. போலீஸாா் அதைப் பறிமுதல் செய்து, நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த பிரபு (43), ராமாபுரத்தைச் சோ்ந்த டைட்டஸ் ஜானி (44) ஆகியோரை கைது செய்தனா். இருவரும் கிரிண்டா் செயலி மூலம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை வாங்கி விற்பது விசாரணையில் தெரியவந்தது.
