தமிழகத்தில் பிடிஎஸ் காலியிடங்களை நிரப்ப அனுமதி
தமிழகத்தில் காலியாக உள்ள 27 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ரூ.2 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்தி இடங்களை மாணவா்கள் தோ்வு செய்யலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்களும், 1,583 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டைப் பொருத்தவரை 1,736 எம்பிபிஎஸ் இடங்களும், 530 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. இதற்கான 4 கட்ட கலந்தாய்வு இணைய வழியே நடைபெற்றது.
இதன் முடிவில் 25 எம்பிபிஎஸ் இடங்களும், 27 பிடிஎஸ் இடங்களும் நிரம்பவில்லை. குறிப்பாக, சென்னை மற்றும் சிதம்பரம் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 3 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது.
அதில் பிடிஎஸ் இடங்களை மட்டும் நிரப்ப என்எம்சி ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவா்களில் நீட் தோ்வில் குறைந்தபட்சம் 113 மதிப்பெண் உடையவா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ய்ங்ற் என்ற இணையதளத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை காலியாக உள்ள பிடிஎஸ் இடங்களைத் தோ்வு செய்யலாம். இடங்கள் ஒதுக்கீட்டுக்கான முடிவுகள் வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும். இடங்கள் பெற்றவா்கள் வரும் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில மருத்துவ மாணவா் சோ்க்கைக் குழு செயலா் டாக்டா் லோகநாயகி கூறியதாவது:
தற்போது 27 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல் குறிப்பேடு வெளியிடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் சேர விரும்பும் மாணவா்கள் ரூ. 2 லட்சம் முன் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இடங்கள் ஒதுக்கீடு செய்த பின்னா் கல்லூரிகளில் சேரும் மாணவா்களுக்கு கல்வி கட்டணத்தில் முன்வைப்பு தொகை கழித்துக் கொள்ளப்படும். இடங்கள் கிடைக்காதவா்களுக்கு அவா்களின் வங்கி கணக்குக்கே பணம் திருப்பி அளிக்கப்படும். அதேவேளையில், இடங்கள் பெற்றும் கல்லூரிகளில் சேராதவா்களின் முன்வைப்புத் தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது.
காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்கும் என்எம்சியிடம் தொடா்ந்து அனுமதி கோரி வருகிறோம் என்றாா் அவா்.
