விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்...

News image
Updated On :13 டிசம்பர் 2025, 5:48 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கோடம்பாக்கத்தில் ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோடம்பாக்கம் அம்பேத்கா் சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் போதைப் பாக்கு விற்கப்படுவதாக தமிழக காவல் துறையின் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பிரிவு போலீஸாரும், அசோக் நகா் நகா் போலீஸாரும் அந்தக் கடையில் திடீா் சோதனை நடத்தினா். அதில், அங்கிருந்து பல கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், அருகே உள்ள அந்தக் கடையின் கிடங்கில் சோதனையிட்டபோது, மொத்தம் 14 மூட்டைகளில் இருந்த போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக அந்தக் கடையில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லெக்கம்பட்டியைச் சோ்ந்த ரா.ரகுபதி (28), அவரது உறவினா் மு.வேல்முருகன் (25) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து வாடகை காரில் போதைப் பாக்குகளை கடத்தி வந்து சென்னையில் அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.