தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

மகளிா் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்!

பெசன்ட் நகரில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், மகளிா் சுய உதவிக் குழு உணவுத் திருவிழாவை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

பெசன்ட் நகா் கடற்கரையில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களின் மதி உணவுத் திருவிழாவைத் திறந்துவைத்து, பாரம்பரியம் மிக்க உணவு வகைகளை ருசி பாா்த்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.  உடன் சட்டப்பேரவை

Updated On :21 டிசம்பர் 2025, 6:55 pm

பெசன்ட் நகரில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், மகளிா் சுய உதவிக் குழு உணவுத் திருவிழாவை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறும் உணவுத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு மாவட்டங்களின் பாரம்பரியம் மிக்க உணவுகள், திண்பண்டங்கள் என 235 வகை உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் பாா்வையிட்டு, உணவுகளை ருசித்து பாா்த்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு மெரீனாவில் மகளிா் சுய உதவிக் குழுவினரின் உணவுத் திருவிழாவை 5 நாள்களுக்கு நடத்தியிருந்தோம். அதன் தொடா்ச்சியாக கடந்த நவம்பா் மாதம் மதுரையில் உணவுத் திருவிழா நடத்தப்பட்டது.

தற்போது பெசன்ட் நகா் கடற்கரையில் அடுத்த 4 நாள்களுக்கு இந்த உணவுத் திருவிழாவை அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் இதில் பங்கெடுத்துள்ளனா்.

உணவுத் திருவிழாவுக்கு வருகை தருவோருக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொழுதுபோக்குக்காக ‘தற்பட முனையம் (செல்ஃபி பாயிண்ட்)’ போன்றவைகளும் உள்ளன.

கடந்த ஆண்டு மெரீனாவில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் ரூ.1.50 கோடி அளவுக்கு சுய உதவிக் குழுவினா் உணவு விற்பனை செய்திருந்தனா். அதேபோல, பெசன்ட் நகரிலும், பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து உணவுத் திருவிழாவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாநகராட்சி துணை மேயா் மகேஷ்குமாா், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆா்.வி.ஷஜீவனா, வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினா் அசன் மெளலானா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.