நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இளைஞா் சிக்கினாா்.

News image

முதல்வர் ஸ்டாலின் - கோப்புப்படம்

Updated On :23 டிசம்பர் 2025, 12:52 am IST

சென்னையில் முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இளைஞா் சிக்கினாா்.

எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமைக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அழைப்பில் பேசிய நபா், ‘தன்னை வினோத்குமாா் என அறிமுகம் செய்து கொண்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வீடு, அவரது காா் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனக்கூறி இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸாா் உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்களின் உத்தரவின்பேரில், தேனாம்பேட்டை போலீஸாா் வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வா் வீட்டுக்குச் சென்று சோதித்தனா்.

அவரது காரிலும் சோதனை நடைபெற்றது. பல மணி நேர சோதனையில், அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால், வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த தொலைபேசி அழைப்பு வந்திருப்பது தெரிய வந்தது.

போலீஸாரின் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தாம்பரம் சேலையூா் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (29) என்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த போலீஸாா், வினோத்குமாரை பிடித்து விசாரணை நடத்தினா். அவா், மதுபோதையில் முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், தன்னைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், காவல் துறையினரை பழிவாங்கும் எண்ணத்துடன் இச்செயலில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா், வினோத்குமாரை எச்சரித்து, எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.