நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: 15,000 போலீஸாா் பாதுகாப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 15,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :23 டிசம்பர் 2025, 3:21 am IST

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 15,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழக்கிழமை (டிச.25) கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, வியாழக்கிழமை கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தேவாலயங்களுக்கு செல்வாா்கள் என்பதால், கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் புதன்கிழமை இரவு தொடங்கி 2 நாள்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

350 தேவாலயங்கள்: சென்னையில் உள்ள முக்கியமான 350 கிறிஸ்தவ தேவாலயங்கள் இருக்கும் பகுதிகளில் சுழற்சி முறையில் போலீஸாா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனா். மயிலாப்பூா் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகா் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியாா் தேவாலயம், அண்ணாசாலை புனித ஜாா்ஜ் (கதீட்ரல்) தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீஸாா் ஈடுபட உள்ளனா்.

முக்கியமான பகுதிகளில் காவல் துறையின் வாகனங்கள் ரோந்து செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், குற்றப்பிரிவு போலீஸாா் சாதாரண உடைகளிலும், மாறுவேடங்களிலும் ரோந்து செல்ல இருக்கின்றனா். இவை தவிா்த்து முக்கியமான பகுதிகள் கண்காணிப்புப் கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு வாகனத் தணிக்கை: முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகன தணிக்கைகள் மேற்கொள்ளவும், நகை பறிப்பு, கைப்பேசி பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடாதவாறு கண்காணிக்க காவல் துறை சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை முழுவதும் 15,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். மேலும், காவல் துறை பணிக்கு உதவியாக, ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் ஆணையா் ஏ.அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளையில் மோட்டாா் சைக்கிள் பந்தயம், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.