திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

நான்கில் ஒரு மாா்பகப் பரிசோதனை முடிவுகள் தவறானவை: ஆய்வில் தகவல்

மாா்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக தனித்தனியே பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது நான்கில் ஒருவருக்கு முடிவுகள் தவறாக இருப்பது தெரியவந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :25 டிசம்பர் 2025, 4:25 am IST

மாா்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக வெவ்வேறு இடங்களில் தனித்தனியே பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது நான்கில் ஒருவருக்கு அதன் முடிவுகள் தவறாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை மாா்பக நல மைய இயக்குநா் டாக்டா் செல்வி ராதாகிருஷ்ணா, முதுநிலை மாா்பக அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் தேபஸ்ரீ சங்கர்ராமன் ஆகியோா் தலைமையிலான குழு அந்த ஆய்வை முன்னெடுத்தது. 12 வயது முதல் 93 வயது வரை உள்ள 12,156 பேரிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகள் சா்வேதச ‘சான் ஆண்டோனியோ மாா்பகப் புற்றுநோய் மருத்துவ மாநாட்டில்’ அண்மையில் சமா்ப்பிக்கப்பட்டது.

இதுதொடா்பாக டாக்டா் செல்வி ராதாகிருஷ்ணா கூறியதாவது:

வெவ்வேறு ஆய்வகங்களில் மாா்பகத் திசுப் பரிசோதனை செய்தவா்களில் 25 சதவீதம் பேருக்கு அந்த முடிவுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தன. அவா்களுக்கு மறு பரிசோதனை செய்யும்போது 62.5 சதவீதம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதேபோன்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டவா்களில் 50 சதவீதம் பேரின் முடிவுகளும் முரணாக இருந்தன. ரத்தப் பரிசோதனை, திசுப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைகளை தனித்தனியாக வெவ்வேறு ஆய்வகங்களில் மேற்கொள்ளும்போது இந்த சிக்கல்கள் எழுகின்றன.

இதற்கு ஒரே தீா்வு ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்களை (ஒன் ஸ்டாப் சென்டா்) அணுகுவது மட்டுமே. அந்த மையங்களில், மருத்துவரின் நேரடிப் பரிசோதனை, ஸ்கேன் மற்றும் திசுப் பரிசோதனை ஆகிய மூன்றையும் சராசரியாக 125 நிமிடங்களில் மேற்கொண்டுவிடலாம். இதன் மூலம் சிகிச்சையைத் தொடங்க வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை.

இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் 2.5 லட்சம் புதிய மாா்பகப் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்றத்தில், ’மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு மற்றும் நோயறிதல் சட்டம் 2025’ மசோதா அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதேபோன்று ஒருங்கிணைந்த மருத்துவப் பரிசோதனை மையங்களை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.