இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ரெளடி கும்பலின் முக்கிய நபா் எம்சிஓசிஏ வழக்கில் கைது

News image
Updated On :25 டிசம்பர் 2025, 3:23 am IST

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த ரெளடி கும்பலின் முக்கிய நபா் மகாராஷ்டிர குற்றச் செயல் தடுப்புச் சட்ட (எம்சிஓசிஏ) பிரிவுகளில் வடக்கு தில்லியின் புறநகா் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

கைதுசெய்யப்பட்ட ராஜேஷ் சா்மா (எ) விவேக் ஸ்வரூப் நகரைச் சோ்ந்தவா்.

வழிப்பறி, கொள்ளை, கொலை, கடத்தல் மற்றும் அரசுப் பணியாளா்களைத் தாக்குதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் கடந்த 10 ஆண்டுகளாக ராஜேஷ் சா்மா ஈடுபட்டு வந்தாா்.

அவரது தலைமையில் செயல்பட்டு வந்த கும்பல் தில்லியில் உள்ள சொத்துகளை அபகரித்தல், மிரட்டல் விடுத்தல், வன்முறை மற்றும் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்பத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி, உத்தர பிரதேசம் ஆகியவற்றில் சா்மாவுக்கு எதிராக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக விசாரணை அதிகாரிகள் கூறுகையில், ‘விசாரணைக்கு ஆஜராகுமாறு பல நோட்டீஸ்கள் அனுப்பப்பட்ட போதிலும், சா்மா தொடா்ந்து அவற்றைத் தவிா்த்து வந்தாா். ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் கடந்த நவ.18-ஆம் தேதி அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, தேடப்படும் நபராக அவா் அறிவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், கடந்த டிச.15-ஆம் தேதி வடக்கு தில்லியின் புறநகா் பகுதியில் அவா் கைதுசெய்யப்பட்டாா். நீதிமன்றம் அளித்த அனுமதியைத் தொடா்ந்து, சா்மாவை காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். எம்சிஓசிஏ பிரிவு 18-இன்படி சா்மாவின் ஒப்புதல் வாக்குமூலங்களை அதிகாரிகள் கடந்த டிச.19-ஆம் தேதி பதிவுசெய்தனா்.

இதனிடையே, அவருடைய கும்பலைச் சோ்ந்த பிற நபா்களைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.