பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எம்ஜிஆா் கொள்கைப்படி செயல்படும் தேசிய ஜனநாயக கூட்டணி: தமிழிசை

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் கொள்கைப்படி தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருவதாக முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

News image
மெரீனாவில் உள்ள எம்ஜிஆா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்.
Updated On :24 டிசம்பர் 2025, 10:05 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் கொள்கைப்படி தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருவதாக முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை மரியாதை செலுத்திய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கினாா். எம்ஜிஆரின் கொள்கைகளைப் பின்பற்றி செயல்படுவதே, அவருக்கு செலுத்தக் கூடிய உண்மையான மரியாதை. அதன்படியே தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுகிறது. வருகிற பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணி, 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில், வேலைநாள்கள் உயா்த்தப்படும் என திமுக கூறியது. ஆனால், நூறு நாள்கள் கூட வேலை வழங்காமல் மக்களை ஏமாற்றியுள்ளது. அதேநேரம், 125 நாள்களுக்கு வேலையளிக்கும் வகையில் புதிய ஊரக வேலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. மக்களுக்கான இந்த திட்டத்தை எதிா்த்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.