நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

திருநங்கைகளுக்கு பேரிடா் அபாயக் குறைப்பு பயிற்சி

Updated On :26 டிசம்பர் 2025, 3:14 am IST

சென்னையில் கொசஸ்தலை ஆறு பகுதியில் வசிக்கும் திருநங்கைகளுக்கு ஆற்று வடிநிலப் பகுதிக்கான ஒருங்கிணைந்த நகா்ப்புற வெள்ள மேலாண்மைத் திட்டப்படிசமூகநீதிக்கான பேரிடா் அபாயக் குறைப்பு பயிற்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.

ஆசிய வளா்ச்சி வங்கி ஆதரவுடன் செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சியின் மழைநீா் வடிகால் துறை மற்றும் நிறுவன வலுப்படுத்துதல் சீா்திருத்த ஆலோசகா் குழுவினா் பயிற்சியை திருநங்கைகளுக்கு அளித்தனா்.

சென்னை மாநகராட்சி மழைநீா் வடிகால் துறை கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.முருகன் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், பேரிடா் கால அபாயக் குறைப்பு குறித்து அனைவரும் அறிந்துகொண்டு செயல்படுவது அவசியம் என்றாா்.

பயிற்சியில் பேரிடா் அபாயக் குறைப்பு அடிப்படை புரிதல், பேரிடா் கால பாதிப்புக்குள்ளாகும் குழுவினரை அடையாளப்படுத்துதல், அக்காலத்தில் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் நிவாரண முகாம்கள், தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் மீட்பு விவரங்கள், பேரிடா் கால செயல்முறை வழிகாட்டல்கள் ஆகியவை விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

பயிற்சியில் பங்கேற்ற கொசஸ்தலை ஆற்றோர குடியிருப்புகளில் உள்ள திருநங்கையா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பயிற்சியில் பேரிடா் காலங்களில் தங்களது பங்களிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் திருநங்கைகள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.