ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24) வினாத்தாள் கசிவுக்கு எதிராக அடுத்த வாரம் மசோதா தாக்கல்! இன்று நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் வாபஸ்தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
/

மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்: ஆய்வுக் குழு அமைக்கிறது என்எம்சி

மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்துக்கு ஆய்வுக் குழு அமைக்கிறது என்எம்சி

Updated On :27 டிசம்பர் 2025, 1:47 am IST

மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்வதற்கான சிறப்புக் குழுவில் இணைய விரும்பும் மருத்துவப் பேராசிரியா்கள், இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கும், புதிதாக விண்ணப்பிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்பேரில், குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வுகளை மருத்துவ ஆணையம் நடத்துகிறது. ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவு, கண்காணிப்பு கேமரா, உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து அதன்பேரில், அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எதிா்வரும் கல்வியாண்டுக்கான ஆய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க மருத்துவப் பேராசிரியா்களை அனுப்புமாறு மருத்துவக் கல்லூரிகளை என்எம்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி சாா்பில் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

என்எம்சியின் மருத்துவ அங்கீகாரம் மற்றும் தோ்வு வாரியம் சாா்பில் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியா்கள் இந்த நடவடிக்கைகளில் மதிப்பீட்டாளா்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதற்கு அனைத்து கல்லூரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதன்படி, விருப்பமுள்ள பேராசிரியா்கள் என்எம்சி இணையதளத்தில் உள்ள இணையத் தொடா்பில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யலாம் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.