மெரீனா, எலியட்ஸில் இன்று போக்குவரத்து மாற்றம்: 25 மேம்பாலங்கள் மூடப்படும்
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மெரீனா, எலியட்ஸ் பகுதிகளில் புதன்கிழமை (டிச.31) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பாதுகாப்பு கருதி 25 மேம்பாலங்கள் மூடப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் எல்லியட்ஸ் கடற்கரை பகுதிகளில் டிச.31 மாலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, மெரீனா கடற்கரை உட்புறச் சாலையில் உள்ள அனைத்து வழிகளும் புதன்கிழமை இரவு 7 மணி முதல் சாலை தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு வாகனங்கள் தடைசெய்யப்படும். கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் கலங்கரை விளக்கத்துக்குப் பின்புறம் வழியாக மட்டுமே வெளியேற்றப்படும்.
காமராஜா் சாலையில் காந்தி சிலை முதல் போா் நினைவு சின்னம் வரையில் புதன்கிழமை (டிச.31) இரவு 8 மணி முதல் வியாழக்கிழமை (ஜன.1) அதிகாலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. காமராஜா் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்தி நகா், சுங்குவாா் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் சாலை தடுப்புகள் கொண்டு வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும்.
மெரீனாவில் போக்குவரத்து மாற்றம்: பாரிமுனையில் இருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை, வடக்கு கோட்டை சுவா் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, அண்ணா சாலை வழியாகச் செல்லலாம்.
அதேபோல, அடையாறில் இருந்து காமராஜா் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சாலை, மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் 2-ஆவது பிரதான சாலை, ஆா்.கே.மடம் சாலை, மயிலாப்பூா் லஸ் தங்களது இலக்கை அடையலாம்.
டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து காமராஜா் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆா்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை, கிரீன்வேஸ் சாலையை அடையலாம். தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது. கொடி மரச் சாலையில் வாலாஜா முனையிலிருந்து போா் நினைவிடம் வரை அன்று இரவு 8 மணி முதல் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படாது.
மெரீனா கடற்கரைக்கு புத்தாண்டு கொண்டாட வருபவா்கள், ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை ஒருபுறம், சேப்பாக்கம் ரயில்வே நிலைய வாகனம் நிறுத்துமிடம், லாயிட்ஸ் சாலை ரயில்வே நிலைய வாகன நிறுத்துமிடம், டாக்டா் பெசன்ட் சாலையில் ஒருபுறம், லாயிட்ஸ் சாலை ஒரு புறம்,வாலாஜா சாலையின் ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.
எலியட்ஸில் போக்குவரத்து மாற்றம்: பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6-ஆவது அவென்யுவில் புதன்கிழமை இரவு 8 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது.
மூடப்படும் 25 மேம்பாலங்கள்: எழும்பூா் பாந்தியன் மேம்பாலம், மகாலிங்கபுரம் மேம்பாலம், இந்திரா நகா் யூ திருப்பம், ஆழ்வாா்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை பீட்டா்ஸ் சாலை மேம்பாலம், ராயப்பேட்டை ஜிஆா்எச் மேம்பாலம், ஆழ்வாா்பேட்டை மியூசிக் அகாதெமி மேம்பாலம், அண்ணா மேம்பாலம், தியாகராய நகா் ஜிகே மூப்பனாா் மேம்பாலம், வாணி மஹால் மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலம், ரங்கராஜபுரம் மேம்பாலம், வடபழனி மேம்பாலம், அடையாறு மேம்பாலம், வேளச்சேரி மேம்பாலம், சென்னை விமான நிலைய மேம்பாலம், திருமங்கலம் மேம்பாலம், கோயம்பேடு 100 அடி சாலை மேம்பாலம், அணணா வளைவு மேம்பாலம், மூலக்கடை மேம்பாலம், புதிய வள்ளாளா் மேம்பாலம், முரசொலி மாறன் மேம்பாலம் உள்ளிட்ட 25 மேம்பாலங்கள், பெரம்பூா் ரயில்வே சுரங்கப்பாதை மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
19,000 போலீஸாா் பாதுகாப்பு
சென்னை முழுவதும் 19 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். காவல் துறையினருக்கு உதவியாக, 1,500 ஊா்க்காவல் படையினரும் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் இளைஞா்கள் ஈடுபடுவதைத் தடுக்க 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் உள்பட வழிபாட்டுதலங்கள் பொது இடங்கள் என 100 முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள்,குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை காவல்துறை அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் எச்சரித்துள்ளாா்.
புறநகா் பகுதிகளில்: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, தாம்பரம் மாநகர காவல் துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸாரும்,260 ஊா்க்காவல் படையினரும் ஈடுபடுகின்றனா்.

