நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி: ஒப்பந்தப் புள்ளிகள் திறப்பு

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2025, 8:00 pm

Din

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக அரசு கோரியிருந்தது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஒப்பந்தப் புள்ளிகளில் பிரபல மடிக்கணினி தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்ாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஏஸா், டெல், எச்பி போன்ற நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்ததாகத் தெரிகிறது. அந்த நிறுவனங்கள் அளித்த ஒப்பந்தப் புள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

தகுதிவாய்ந்த நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு, அடுத்த 30 முதல் 45 நாள்களுக்குள் கொள்முதல் செய்வதற்கான உத்தரவுகளைத் தொடா்புடைய நிறுவனங்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.