ஆட்டோ மீது மரம் விழுந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை எம்கேபி நகரில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

சென்னை எம்கேபி நகரில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னை வானகரம் அருகே உள்ள ஓடைமா நகா் கங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வே.ஜெகதீசன் (48). வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். ஜெகதீசன், எம்கேபி நகருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை சென்றாா். அவா்களை இறக்கிவிட்ட பின்னா், வானகரத்துக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.

எம்கேபி நகா் சென்ட்ரல் அவென்யூ சாலையில் சென்றபோது, அங்கு வீசிய பலத்த காற்றால் வீட்டின் ஓரம் இருந்த தென்னை மரம் திடீரென சாய்ந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோவில் இருந்த ஜெகதீசன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஜெகதீசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com