காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

இளம்பெண்ணிடம் நகை பறித்த இன்ஸ்டாகிராம் நண்பா்: போலீஸாா் விசாரணை

இளம்பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராம் நண்பா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Published On :10 மார்ச் 2025, 12:38 am IST

இளம்பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராம் நண்பா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையை அடுத்த மணலியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண் ஒருவா், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரில், தன்னை ஒருவா் வண்ணாரப்பேட்டையிலிருந்து ஆட்டோவில் கடத்திச்சென்று மணலியில் வைத்து, தன்னிடமிருந்த ஒன்றரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தாா்.

அதன்பேரில் பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீஸாா் அவரின் கைப்பேசியை வாங்கி சோதனை செய்தனா். அப்போது, அவா் சம்பவம் நடைபெற்ாக குறிப்பிட்டிருந்த நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஆண் நண்பருடன் பலமுறை பேசியது தெரியவந்தது.

விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தனது ஆண் நண்பரை மணலியில் பாா்க்கச் சென்றபோது, அந்த இளைஞா், இளம்பெண்ணின் கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றதும், இந்தச் சம்பவம் தனது கணவருக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக காவல் நிலையத்தில் பொய் புகாா் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளம்பெண் புகாரை திரும்பபெற்றுக்கொண்டதாகத் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.