மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடற்கரை - எழும்பூா் 4-ஆவது வழித்தடத்தில் சோதனை ஓட்டம்!

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4-ஆவது வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினா்.

News image

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரயில் சோதனை ஓட்டம்.

Updated On :9 மார்ச் 2025, 7:10 pm

Din

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4-ஆவது வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினா்.

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த ரயில் வழித்தடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், முதல்கட்ட சோதனை ஓட்டம் தெற்கு ரயில்வே தலைமை மின்துறை பொறியாளா் சோமஸ் குமாா் தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட ரயில் வழித்தடத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே ரயிலை இயக்கி சோதனை செய்த ஏ.எம்.சௌத்ரி தண்டவாளம், சிக்னல் அமைப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். விரைவில் இதற்கான அறிக்கை ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன்பின் ரயில் இயக்க அனுமதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.