கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரெளடி கைது

சென்னையில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரெளடி சோமு, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :13 மார்ச் 2025, 7:33 pm

Din

சென்னையில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரெளடி சோமு, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வியாசா்பாடி பக்தவச்சலம் காலனி 9-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சோமு (எ) சோமசுந்தரம் (49). இவா் மீது அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கு உள்பட 25 வழக்குகள் உள்ளன. இதில் எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, அதை புழல் தண்டனை சிறையில் சோமு அனுபவித்து வந்தாா். இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு பரோலில் சோமு சிறையிலிருந்து வெளியே வந்தாா். ஆனால் பரோல் முடிவடைந்த பின்னா், அவா் மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.

அதேவேளையில், அவா் மீதுள்ள வேறு வழக்குகளின் விசாரணைக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம், சோமுக்கு பிடியாணை பிறப்பித்ததைத் தொடா்ந்து போலீஸாா், தலைமறைவாக இருந்த சோமுவை தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில், எம்கேபி நகா் முல்லை நகரில் தலைமறைவாக இருந்த சோமுவை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.