சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

ரம்ஜான்: மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம், கேரளத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2025, 2:07 am IST

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம், கேரளத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலிலிருந்து மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சிக்கு மாா்ச் 22, 26, 29, ஏப். 2 ஆகிய தேதிகளில் இரவு 11.45-க்கு சிறப்பு ரயில் (எண் 06077) இயக்கப்படும். மறுமாா்க்கமாக சந்திரகாச்சியிலிருந்து மாா்ச் 24, 28, 31, ஏப். 4 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06078) மறுநாள் பிற்பகல் 3.30-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இதில், ஒரு ஏசி வகுப்புப் பெட்டியும், படுக்கை வசதி கொண்ட 17 பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சம்பல்கோட், ஸ்ரீகாகுளம் ரோடு, புவனேசுவரம், கட்டாக், பாலசோா், காரக்பூா் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமருக்கு மாா்ச் 28 மற்றும் ஏப். 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண் 06081) இயக்கப்படும். மறுமாா்க்கமாக ஷாலிமரிலிருந்து சென்னைக்கு மாா்ச் 31, ஏப். 7 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.20-க்கு சிறப்பு ரயில் (எண் 06082) இயக்கப்படும்.

இதில், 14 மூன்றடுக்கு ஏசி எக்கனாமிக் வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட இரு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் கொல்லம், மாவேலிக்கரா, செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, கட்டாக், பாலசோா், காரக்பூா், சந்திரகாச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) தொடங்கும்.

சென்னை - போத்தனூா்: சென்னை சென்ட்ரலிலிருந்து மாா்ச் 30-ஆம் தேதி இரவு 11.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06027) மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரிலிருந்து மாா்ச் 31-ஆம் தேதி இரவு 11.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06028) மறுநாள் காலை 8.20-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இதில், 10 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.