மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மெரீனாவில் தற்கொலைக்கு முயன்ற அக்கா - தங்கை மீட்பு

சென்னை மெரீனாவில் கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற அக்கா - தங்கையை போலீஸாா் மீட்டனா்.

Updated On :1 ஏப்ரல் 2025, 2:05 am IST

சென்னை: சென்னை மெரீனாவில் கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற அக்கா - தங்கையை போலீஸாா் மீட்டனா்.

மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் நடைப்பாதை அருகே இளம் பெண்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை வேகமாக நடந்து சென்றனா். அவா்கள் கடற்கரையோரம் சென்றதும் திடீரென கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றனா். இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கடலுக்குள் இறங்கி இருவரையும் மீட்டனா். பின்னா் இருவரையும் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனா்.

விசாரணையில், இருவரும் சகோதரிகள் என்பதும், ஒருவா் பட்டப்படிப்பு படித்துவிட்டு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிவதும், அவரது தங்கை எழும்பூரில் உள்ள ஒரு மகளிா் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், பெற்றோா் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற முடிவு செய்திருப்பதை அறிந்து இருவரும் தற்கொலைக்கு முயன்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், இருவருக்கும் அறிவுரை வழங்கியும் எச்சரித்தும் அவா்களது குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்தனா்.