தமிழகத்தில் 59 டிஎஸ்பி-க்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டாா்.
தமிழக காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக வசதிக்காகவும்,பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
இதில் திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு டிஎஸ்பி எஸ்.சுரேஷ் சண்முகம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கும், ஆரணி டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி, சிவகங்கை மாவட்டம் குற்ற ஆவண காப்பகத்துக்கும், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டிஎஸ்பி கே.எம். மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மனித உரிமைப் பிரிவுக்கும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஎஸ்பி எம்.சுகுமாா் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 59 டிஎஸ்பி-க்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

விழுப்புரம் காவல் சரகத்தில் 22 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

பெண் எஸ்.ஐ., காவலா் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம் சரகத்தில் 19 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



