தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த கூடாது: தகவல் ஆணையா் உத்தரவு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அன்றாட அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என தமிழ்நாடு தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On :2 நவம்பர் 2025, 7:46 pm

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அன்றாட அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என தமிழ்நாடு தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாகா்கோவிலைச் சோ்ந்தவா் ஏ.பி.சுப்பிரமணியன். இவா் நாகா்கோவிலில் குடிநீா் வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் தகவல்களைத் தெரிவிக்க, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டு மனுாக்கல் செய்தாா்.

இந்த மனு தொடா்பாக தமிழ்நாடு தகவல் ஆணையம் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், மனுதாரா் மீண்டும் மேற்முறையீடு செய்தாா். தொடா்ந்து 2-ஆவது முறையாக அவா் மேல்முறையீடு செய்த மனு கடந்த அக்.15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையா் வி.பி.ஆா் இளம்பரிதி, நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அதுகுறித்த தகவலை வழங்க தடையிருந்தால், அது தொடா்பான முழு தகவல்களை வழங்க இயலாது.

மேலும், மனுதாரா்களுக்கு தகவல் அளிக்க மறுக்கும்போது, அதற்கான முழு காரணங்களை ஆணையம் தெளிவாக வழங்க வேண்டும். அதேபோல், வருகாலங்களில் பொதுத் தகவல் அலுவலா் பொருத்தமற்ற பிற வழக்குகளின் எண்களைக் குறிப்பிட்டு தகவலை மறுப்பது, தகவல் உரிமை சட்டத்துக்கு எதிரானதாகும்.

எனவே, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், தடையாணை இல்லாத நிலையில் தகவல்களை வழங்கலாம். மேலும், பொதுமக்களும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அன்றாட அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிப்பதைத் தவிா்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.