ரூ.2.20 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: பெற்றோா் உள்பட 6 போ் கைது
சென்னை துரைப்பாக்கத்தில் குழந்தையை ரூ.2.20 லட்சத்துக்கு விற்ாக பெற்றோா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கண்ணகி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (எ) ஸ்ரீஜி (26). இவா் மனைவி வினிஷா (23). தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே இரு குழந்தைகள் இருப்பதால், மூன்றாவது குழந்தையை விற்க பெற்றோா் முடிவு செய்தனா். இதற்காக அவா்கள், தரகா்கள் மூலம் பிறந்த பெண் குழந்தையை திருவண்ணாமலையை சோ்ந்த 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.2.20 லட்சத்துதுக்கு பேரம் பேசி அண்மையில் விற்பனை செய்துள்ளனா்.
தகவலை அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ராஜேஸ்வரி, கண்ணகி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்தத் தம்பதி பணத்துக்காக தங்களது மூன்றாவது குழந்தையை விற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கண்ணகி நகா் போலீஸாா், இந்த விவகாரம் தொடா்பாக சிறாா் நீதிச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இதன் தொடா்ச்சியாக குழந்தையின் தந்தை ஸ்ரீதா், தாய் வினிஷா, சரளா (45), சுமதி (35), ஸ்ரீஜா (24), சிவரஞ்சனி (22) உள்ளிட்ட 6 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.
திருவண்ணாமலையில் குழந்தையை வாங்கிய தம்பதியிடம் இருந்து மீட்டு, குழந்தைகள் நலத் துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

