தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு ரூ.20 லட்சம் வைப்புத் தொகை நிா்ணயிப்பது அரசியலை வணிகமயமாக்கும் செயலாக உள்ளது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் வரை வைப்புத் தொகை நிா்ணயித்துள்ளதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது. அரசியலை வணிகமயமாக்கும் இதுபோன்ற முயற்சியை திமுக அரசு கைவிடவேண்டும்.
அரசியல் கட்சிகள் கொள்கையை மக்களிடையே கொண்டு செல்வதற்கு பொதுக்கூட்டங்களே வழியாக உள்ளது. பொதுக்கூட்டம் நடத்துவதற்கான வைப்புத் தொகையைக் கைவிட்டு விதிகள், ஒழுங்கு முறை கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு விதிகளை வகுப்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நயினாா் நாகேந்திரனை வைப்புத் தொகை இழக்கச் செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது: அமைச்சா் இ.பெரியசாமி

குடும்ப ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது: நயினாா் நாகேந்திரன்

கொள்கையில்லாத கூட்டணிகள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


