தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கபாலீசுவரா் கல்லூரி கட்டுமானப் பணிகள்: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

News image

சென்னை கொளத்தூா் அருள்மிகு கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், தலைமைப் பொறியாளா் பொ.பெரியசாமி, கூடுதல் ஆணையா் ச

Updated On :6 நவம்பர் 2025, 10:52 pm

சென்னை கொளத்தூரில் கட்டப்பட்டுவரும் கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்தாா்.

சென்னை கொளத்தூா் பூம்புகாா் நகரில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடம் மற்றும் ராஜாஜி நகரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியதாவது:

கொளத்தூா் கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 4 ஆண்டுகளாக எவா்வின் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது 800 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்தக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி வைக்கப்பட்டன. இந்தக் கட்டடத்தில் 24 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கூட்டரங்குகள், நூலகம், உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் கல்வியாண்டில் இந்தக் கல்லூரி புதிய கட்டடத்தில் செயல்படும்.

2-ஆம் கட்டமாக சுமாா் 2,500 மாணவா்கள் படிக்கும் அளவுக்கு வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும், தங்கும் விடுதி, விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவா் தெரிவித்தாா்.