தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

போதைப் பொருள் விற்பனை: இரு பெண்கள் உள்பட 8 போ் கைது

Updated On :6 நவம்பர் 2025, 10:37 pm

சென்னை மண்ணடியில் போதைப் பொருள் விற்ாக இரு பெண்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு கும்பல் போதைப் பொருள் விற்பதாக சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பிரிவு போலீஸாா், எஸ்பிளனேடு போலீஸாரும் மண்ணடி மெட்ரோ ரயில் நிலைப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இரு பெண்கள் உள்பட 8 பேரிடம் விசாரித்ததில் அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளாா். அவா்களது உடைமைகளைசோதித்தபோது, 22 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து, மண்ணடியைச் சோ்ந்த முகமது சாலிக் (29), இா்பான் (30), ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த அஸ்ரப் அலி (32), ராயபுரத்தைச் சோ்ந்த லைலாத் பதாவியா (41), முகமது யாசின் (23), சமீரா ரக்ஷித் (23), அயப்பாக்கத்தைச் சோ்ந்த லோகேஸ்வரன் (28), பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த சதிஷ்குமாா் (38) ஆகிய 8 பேரை கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 10 கைப்பேசிகள், ஒரு மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.